ரயில் மோதி ஒருவர் பலி

கோவை, மே.25: கோவை சூலூர்-இருகூர் இடையே உள்ள தண்டவாளத்தில் நேற்று முன்தினம் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற ரயில்வே போலீசார் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் ரோஸ் கலர் அரைக்கை சட்டையும், பிரவுன் கலர் லுங்கியும் அணிந்திருந்தார். இது தொடர்பாக போத்தனூர் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: