மே 28ல் முப்பெரும் விழா

ஈரோடு, மே 25: மாவீரன் பொல்லான் வரலாறு மீட்புக்குழு சார்பில் ஈரோடு நல்லி அரங்கத்தில் வரும் 28ம் தேதி மாவீரன் பொல்லான் வரலாறு மீட்பு கருத்தரங்கம், சமூக போராளி ராமன் படத்திறப்பு விழா மற்றும் பொல்லான் வரலாறு நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா நடக்கிறது.விழாவிற்கு ஒருங்கிணைப்பாளர் வடிவேல் தலைமை தாங்குகிறார். இதில் பொல்லான் வரலாற்று நூலை ஆதிதமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் வெளியிடுகிறார்.  

சமூக போராளி ராமன் படத்தை தமிழ்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் திறந்து வைக்கிறார். விழாவில், ஆதிதமிழர் கட்சி தலைவர் கல்யாணசுந்தரம், இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி தலைவர் வீரா.சிதம்பரம், தலித் விடுதலைகட்சி பொதுச்செயலாளர் செங்கோட்டையன், விடுதலை வேங்கைகள் கட்சி தலைவர் தமிழ்இன்பன் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

Related Stories: