ரயில் மோதி ஒருவர் பலி

ஈரோடு, மே 25:  ஈரோடு ஆர்எஸ்.,க்கும், காவேரி ஆர்எஸ்.,க்கும் இடைப்பட்ட பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்து போனவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், இறந்து போனவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில்மோதி இறந்திருக்கலாம் என தெரியவந்தது.

ஆனால் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.  ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: