பவானி அருகே குடிநீர் விநியோகத்தில் குறைபாடு

பவானி, மே 25:  பவானி அருகே குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக பேரூராட்சி அதிகாரிகள் அப்பகுதி மக்களிடம் நேற்று குறை கேட்டனர். ஜம்பை பேரூராட்சி, வாய்க்கால்பாளையம் கிராமத்தில் கடும் குடிநீர் நிலவி வருகிறது. பல இடங்களில் குடிநீர் விநியோகம் செய்வதில் குறைபாடு உள்ளது. இதை சரிசெய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. இதை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் தண்ணீர் வராத குடிநீர் குழாய்களுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி போராட்டம் நடத்த மக்கள் முடிவு செய்தனர்.

 

தகவல் அறிந்த பேரூராட்சி இளநிலை அலுவலர் செல்வி மற்றும் அதிகாரிகள் வாய்க்கால்பாளையம் மேல்காலனி, கீழ்காலனி பகுதிகளில் உள்ள குடிநீர், ஆழ்குழாய் கிணற்று தண்ணீர் விநியோக குறைபாடுகள் குறித்து நேற்று ஆய்வு செய்தனர். மேலும், பொதுமக்களிடம் குறை கேட்டறிந்தோடு, தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

Related Stories: