சுமைதூக்கும் தொழிலாளர்கள் பேரணி

ஈரோடு, மே 25: ஈரோடு மாவட்ட சுமைதூக்குவோர் மத்திய சங்கம் சார்பில் ஈரோடு வ.உ.சி.பூங்காவில் மே தினவிழா பேரணி நேற்று நடந்தது.

ஈரோடு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளரும், சுமைதூக்குவோர் சங்க செயலாளருமான தெய்வநாயகம் தலைமை தாங்கினார். மே தினவிழா பேரணியை ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ தென்னரசு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மறைந்த சங்க உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 16 குடும்பங்களுக்கு நிதியுதவியை ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.

சங்க தலைவர் விஜயகுமார், பகுதி கழக செயலாளர் கேசவமூர்த்தி, சங்க நிர்வாகிகள் நல்லசாமி, கணேசன், செல்வம், வீரமணி, அருணாச்சலம், குருசாமி உட்பட பல்வேறு சுமைதூக்கும் தொழிலாளர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். ஈரோடு வ.உ.சி.பூங்காவில் தொடங்கிய இந்த பேரணி சத்திரோடு, மஜீத்வீதி, மார்க்கெட், மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோயில் வீதி, காமராஜர் வீதி, பிரப்ரோடு வழியாக பன்னீர்செல்வம் பூங்காவில் நிறைவடைந்தது.

Related Stories: