ஈரோடு, மே 25: ஈரோடு மாவட்ட சுமைதூக்குவோர் மத்திய சங்கம் சார்பில் ஈரோடு வ.உ.சி.பூங்காவில் மே தினவிழா பேரணி நேற்று நடந்தது.
ஈரோடு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளரும், சுமைதூக்குவோர் சங்க செயலாளருமான தெய்வநாயகம் தலைமை தாங்கினார். மே தினவிழா பேரணியை ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ தென்னரசு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மறைந்த சங்க உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 16 குடும்பங்களுக்கு நிதியுதவியை ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.