வாலிபர் தற்கொலை

ஈரோடு, மே 25: கோபி வாணிப்புத்தூர் பள்ளத்தூர் மேட்டை சேர்ந்த குழந்தைசாமி மகன் பிரபு (28). தொழிலாளி. இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்கோதை (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபு மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்தார். இவரை மதுப்பழக்கத்தை கைவிடுமாறு மனைவி வற்புறுத்தினார்.  இதனால் மனைவியிடம் கோபித்து கொண்டு பிரபு அவரது அம்மா வீட்டிற்கு சென்றார்.இந்நிலையில் மதுப்பழக்கத்தை கைவிட முடியாத விரக்தியில் கடந்த 21ம் தேதி பிரபு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இத்தகவல் அறிந்து வந்த பூங்கோதை, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிரபுவை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் பிரபு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: