×

திருடர்களை பிடிக்க போலீசார் தீவிரம் உண்டியல் திறப்பு

அழகர்கோவில், மே 25: அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலின் உண்டியல் திறப்பு அங்குள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் வைத்து திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ.22 லட்சத்து 53 ஆயிரத்து 321ம், தங்கம் 33 கிராமும், வெள்ளி 99 கிராமும், வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தன. இதேபோல் இக்கோயிலின் உபகோயிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

இதில் ரூ.3 லட்சத்து 17 ஆயிரத்து 399 ரொக்கப் பணமும், வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தன. உண்டியல் எண்ணும் பணியில் அய்யப்ப சேவா சங்கத்தினர், திருக்கோயில் பணியாளர்கள்  ஈடுபட்டிருந்தனர். உண்டியல் திறப்பின்போது  நிர்வாக அதிகாரி மாரிமுத்து, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, மற்றும் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : thieves ,
× RELATED செங்கல்பட்டு அருகே ஊராட்சிமன்ற...