×

நடந்த சென்ற பெண்ணிடம் 12 பவுன் தாலி செயின் பறிப்பு

மதுரை, மே 25:ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் 12 பவுன் தங்க தாலி செயினை, டூவீலரில் வந்த 2 பேர் பறித்துச் சென்றனர். மதுரை வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய காலனியை சேர்ந்த அசோக்குமார் மனைவி ஜெயப்பிரதா (36). இவர் இரவில் வில்லாபுரம் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வாங்கிவிட்டு, பூ மார்க்கெட் ரோடு வழியாக வீட்டிற்கு நடந்து வந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர்கள் திடீரென்று, ஜெயப்பிரதா கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு, அவரை கீழே தள்ளிட்டு சென்றனர். கீழே விழுந்தவர் எழுந்து கத்தினார். அதற்குள் மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரில், அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED அழகர்கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்