அதிமுக வேட்பாளருக்கு சான்றிதழ் பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை

கொடைக்கானல், மே 25:  கொடைக்கானல்  மேல்மலை மன்னவனூர் ஊராட்சி கவுஞ்சிராஜபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (36).  விவசாயி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவருக்கு  வயிற்று வலி வந்ததாக தெரிகிறது. இதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும்  குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாரிமுத்து வீட்டில்  இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு  கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக  தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து  உயிரிழந்தார். இதுகுறித்து கொடைக்கானல் சப்இன்ஸ்பெக்டர் தனிக்கொடி  வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: