பழநி அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி

பழநி, மே 25: பழநி அருகே மின்னல் தாக்கியதில் விவசாயி  பலியானார். பழநி பகுதியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பழநி அருகே வெள்ளையக்கவுண்டன்வலசைச் சேர்ந்தவர் கருப்புச்சாமி (45). விவசாயி.  நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் தனது மகன் செல்வமதன் (15) என்பவருடன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியது. இதில் கருப்புச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த செல்வமதன் சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: