பைக் மீது மினி லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

வீரவநல்லூர், மே 25:  பத்தமடையில் பைக் மீது மினிலாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார். சேரன்மகாதேவி ராஜாஜி தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் பாலன்(24), தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.  நேற்று முன்தினம் காலை இவர் சேரன்மகாதேவியிலிருந்து பைக்கில் தூத்துகுடிக்கு சென்றுள்ளார். பத்தமடை அருகே வரும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மினிலாரியும் பைக்கும் நேருக்குநேர் மோதியது. இதில் படுகாயமடைந்த பாலனை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை பாலன் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை ராமசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்குபதிந்து மினிலாரி ஓட்டுநர் நெல்லை மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்த ராஜாமணி மகன் ஈஸ்வரன்(22) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: