×

பைக்கில் மணல் கடத்திய இருவர் கைது

நாங்குநேரி. மே 25:  மூன்றடைப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் பூலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள குளத்து ஓடையில் சாக்கு மூட்டைகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்த இருவர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கிப்பிடித்தனர். அதில் பிடிபட்ட பூலம் மேலத்தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன்கள் முருகன்(34), மாரியப்பன்(32) என்பதும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் உரிய அனுமதியின்றி பைக்கில் மணல் கடத்தி அதிக விலைக்கு விற்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய பைக் மற்றும் மூன்று சாக்கு மூடை மணல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Tags : men ,
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்