×

செங்கோட்டை அருகே ஓடை தடுப்பு சுவர் கட்டப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

செங்கோட்டை, மே 25  செங்கோட்டை அருகே உள்ள கணக்கபிள்ளை வலசை 1வது வார்டு பகுதியில் உள்ளது சர்ச் கீழ தெரு. இந்த பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி சாலையை ஒட்டியே அமைந்துள்ளது. பண்பொழியிலிருந்து நெடுங்குளம் செல்லும் ஓடை, சுமார் 15 அடி ஆழமும் 10 அடி அகலமும் கொண்டது. இந்த ஓடையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை பெருக்கெடுத்து பண்பொழி வழியாக இந்த ஓடையில் வந்து குத்துக்கல்வலசை நெடுங்குளம்  நிரம்புவது வழக்கம். இந்த ஓடையை ஒட்டி கணக்கப்பிள்ளை வலசை சர்ச் கீழத்தெரு சாலை இணைந்தபடி உள்ளது. இந்த இணைப்பில் பாலம் எதுவும் கட்டப்படாமல் அப்படியே விடப்பட்டு உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் இந்த தெரு வழியாக செல்ல முடியாமல் உள்ளது. இரவு நேரங்களில் இந்த பகுதியில் வெளிச்சமும் இல்லாததால் பலர் இந்த ஓடைக்குள் விழும் நிலையும் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் வீடுகளுக்கு புகும் நிலையும் உள்ளது. இதனால் இந்த தெருவை ஒட்டிய பகுதி வரை ஓடையின் ஓரத்தில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என இந்த பகுதி மக்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Red Fort ,
× RELATED செங்கோட்டை அருகே அரசுப் பேருந்தில்...