பெண்ணின் வங்கிக்கணக்கில் ரூ.25 ஆயிரம் அபேஸ்

பணகுடி,மே25: சாமியார் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தனது பெயரில் கணக்கு வைத்துள்ளார். அதில் பெண்கள் சுய உதவி குழு மூலம் எடுத்த கடன் பணத்தை வங்கி கணக்கில் செலுத்தியிருந்தார். இவரது வங்கிகணக்கில் ரூ. 26 ஆயிரம் இருந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் நேற்று மதியம் இவரின் செல்போனுக்கு மர்மநபரின்  அழைப்பு வந்துள்ளது அதில் பேசிய நபர், உங்களது வங்கி கணக்கை புதுபிக்கவேண்டியதுள்ளதால் கணக்கு எண் மற்றும் ஏடிஎம் ரகசிய எண்ணை கூறுமாறு தெரிவித்துள்ளார். அந்த பெண்ணும் தனது ஏடிஎம் எண்ணை தெரிவித்துள்ளார். சில மணி நேரம் கழித்து அவரது வங்கிக்கணக்கிலிருந்து ரூ. 25 ஆயிரம் எடுக்கப்பட்டதாக செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் வங்கிக்கு சென்று விசாரித்ததில் அவரது  வங்கி கணக்கிலிருந்து ஏடிஎம் மூலம் பணம் பறிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.

Related Stories: