×

திருக்கோவிலூர் தகடி-கூவனூர் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

திருக்கோவிலூர், மே 25: திருக்கோவிலூர் அடுத்த தகடி முதல் கூவனூர் தஞ்சாவூரான் சாலை வரை நெடுஞ்சாலை உள்ளது. சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த சாலை பழுதடைந்து சுமார் 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலை பழுதால் திருப்பாலப்பந்தல், தகடி, தி.முடியனூர், அருதங்குடி, மிலாரிப்பட்டு, கூவனூர், தக்கா ஆகிய கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்காக திருக்கோவிலூர், திருவண்ணாமலை, மணலூர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கும் புகழ்பெற்ற ஆன்மிக தலமான திருவரங்கத்திற்கும் சென்று வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.மேலும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த கரும்பு, நெல், மணிலா, வாழை உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்காக கொண்டு செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். அதோடு அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Tirukovilur Thadadi-Kovanur ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...