×

கந்தசாமிபுரம் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்ய கோரிக்கை

உளுந்தூர்பேட்டை, மே 25: உளுந்தூர்பேட்டை பேரூராட்சி கந்தசாமிபுரம் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் கழிவுநீர் வாய்க்கால்களில் செல்கிறது.  இந்நிலையில் கடந்த சில வாரங்களாக முக்கிய தெருக்களில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் கழிவுநீர் செல்வதில் தடை ஏற்பட்டு கழிவுநீர் தெருவில் உள்ள சாலைகளில் ஓடும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பேரூராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்கால் அடைப்புகளை சுத்தம் செய்து தடையின்றி கழிவுநீர் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கந்தசாமிபுரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : area ,Kandasamyapuram ,
× RELATED வாட்டி வதைக்கும்...