×

வானூர் அருகே கிணற்றில் ஆண் சடலம்

வானூர், மே 25: வானூர் அருகே கிளியனூரில் கிணற்றில் ஆண் சடலம் கிடந்தது. சடலமாக கிடந்த நபர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வானூர் தாலுகா கிளியனூர் கிராமத்தில் சமுதாயக்கூடம் அருகே சிவமுருகன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சுமார் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக கிளியனூர் போலீசாருக்கு தகவல் வந்தது.அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றினர். சடலம் துர்நாற்றம் வீசியதால் இறந்து 4 நாட்கள் இருக்கும் என போலீசார் கருதுகின்றனர். பின்னர் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இறந்த நபர் யார்? அவர் எப்படி இறந்தார்? குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது யாராவது கொலை செய்து கிணற்றில் போட்டு விட்டு சென்றார்களா?  என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Vallur ,
× RELATED வல்லூர் அனல் மின்நிலைய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்