×

பல்வேறு வழக்குகளில் தொடர்பு கொள்ளையர்கள் 3 பேர் அதிரடி கைது 35 பவுன் நகை பறிமுதல்

திண்டிவனம், மே  25: திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் இயங்கி வரும் ஓட்டல் ஒன்றில் நேற்று காலை 3 பேர்  உணவு சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து திண்டிவனம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் ஓட்டலில் தகராறு செய்த 3 பேரையும் திண்டிவனம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.   அதில், விக்கிரவாண்டி தாலுகா சித்தேரி கிராமத்தை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் அருணாச்சலம்(35), திருக்கோவிலூர் தாலுகா சோழ பாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் வேலியப்பன்(35) மற்றும் அதே ஊரை சேர்ந்த முனியன் மகன் பாண்டியன் (42) என தெரியவந்தது.இவர்கள் 3 பேரும் திண்டிவனம், மயிலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்ததும், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை தாக்கி தங்க  நகைகளை பறித்ததும் தெரிய வந்தது.

மேலும் நெல்லிக்குப்பம், கண்டமங்கலம், சேலையூர், பூந்தமல்லி, உத்திரமேரூர், கும்பகோணம், செஞ்சி போன்ற காவல் நிலையங்களில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் இவர்கள் மீது நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து திண்டிவனம் டிஎஸ்பி கனகேஸ்வரி உத்தரவின்பேரில், 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 35 சவரன் தங்க நகைகள் மற்றும் 350 கிராம் வெள்ளி நகைகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : burglars ,
× RELATED தொண்டாமுத்தூர் அருகே டீக்கடையில் 37...