×

மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

வானூர், மே 25: வானூர் தாலுகா கிளியனூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஓமந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி(65). சம்பவத்தன்று மாலை இவர் வீட்டருகே இருந்த புளியமரத்தில் ஏறி புளியம்பழங்களை பறித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  இது குறித்து கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை