அனைத்து தொகுதியிலும் வாக்களித்த மக்களுக்கு நன்றி

புதுச்சேரி, மே 25:      மக்கள் நீதி மய்யத்தின் புதுச்சேரி மாநில தலைவர் எம்ஏஎஸ்.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: நடந்து முடிந்த புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலை எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல், ஓட்டுக்காக பணத்தையும் தராமல் மக்கள் நீதி மய்யம் சந்தித்தது. அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் பரவலான ஓட்டுக்களையும் மக்கள் அளித்துள்ளனர். வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கும், தேர்தலில் உழைத்த கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வருங்காலத்தில் மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை உயர வேண்டும். மக்கள் நீதி மய்யத்திற்கான வாக்குகள் உயரும்போதுதான் ஆட்சியில் நல்ல நிர்வாகத்தை தர முடியும். புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் புதுச்சேரியின் முக்கிய தேவைகளாக உள்ள மத்திய அரசின் கடன் தள்ளுபடி, மாநில அந்தஸ்து, மத்திய அரசின் கூடுதல் மானியம் ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி பெற்றுத்தர கடும் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: