×

எம்பியாக பணியாற்ற வாய்ப்பளித்த கட்சி தலைவர் ரங்கசாமிக்கு நன்றி

புதுச்சேரி, மே 25:  புதுச்சேரி முன்னாள் எம்பி ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பான வெற்றியை பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சிக்கு தேச மக்கள் அளித்த நற்சான்றாக இந்த வெற்றி அமைந்துள்ளது என்றால் அதுமிகையாகாது. மக்களின் எண்ணப்படி பாஜக பல்வேறு மாநிலங்களில் சிறப்பானதொரு வெற்றியை ஈட்டியுள்ளது. இத்தருணத்தில் அக்கட்சியின் தலைவர் அமித்ஷாவுக்கும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளும் மகத்தான வெற்றியை பெற்றுள்ளன. இந்த வெற்றிக்கு காரணமான திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் புதுச்சேரியில் சிறந்த வெற்றியை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வைத்திலிங்கத்துக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கிறேன். வைத்திலிங்கத்தின் அனுபவம் நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் துணைநிற்கும் என்று நம்பிக்கை கொள்கிறேன்.

 கடந்த 5 ஆண்டு காலம் எம்பியாக பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கும், என்னை தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய புதுச்சேரி மக்களுக்கும் என் நன்றியை இத்தருணத்தில் உரித்தாக்குகிறேன். நான் எம்பியாக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு திட்டங்களையும், மேம்பாட்டு நிதியையும் மாநில வளர்ச்சிக்காக அளித்துள்ளேன் என்றார்.

Tags : Rangaswamy ,
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி