×

வங்கி ஊழியர் மாயம்

புதுச்சேரி,  மே 25:  லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் தினேஷ் (30). தனியார் வங்கி  ஊழியரான இவர் கடந்த 17ம்தேதி வெளியே சென்றார். அதன் பின் வீடு திரும்பவில்லை. கணவரை அவரது மனைவி அனிதா மற்றும்  உறவினர்கள் பல இடங்களில் தேடி அலைந்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து  லாஸ்பேட்டை போலீசில் அனிதா புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கடத்தப்பட்டாரா? என்ற சந்தேகம்  போலீசுக்கு வலுத்துள்ளது. அதன்பேரில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...