×

ஸ்டாலின் முதல்வராக பாடுபடுவேன்

கடலூர், மே 25:  கடலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் ரமேஷ் 1.43 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் அதிகாரி அன்புச்செல்வன் வழங்கினார். இதைதொடர்ந்து கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ, புகழேந்தி ஆகியோரிடம் ரமேஷ் எம்பி வாழ்த்து பெற்றார். மேலும் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.கடலூர் நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் சிவகுமார், நிர்வாகிகள் பண்ருட்டி ராஜேந்திரன், கதிர்காமன் சீனு, மதனகுரு, ராமாபுரம் ஞானசேகர், துரை, காசிநாதன், காட்டுக்கூடலூர் பாரி வள்ளல், காடாம்புலியூர் ஆடலரசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் வெற்றி வரவேற்பில் கலந்துகொண்டனர்.
 
பொதுமக்கள் உள்ளிட்ட பலருக்கு இனிப்பு வழங்கிய திமுக எம்பி ரமேஷ் பின்னர் நிருபரிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பணபலம் தோல்வியுற்று, மக்கள் ஜனநாயகம் வெற்றி கண்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் அயராத உழைப்பு, சேவைக்காக, தமிழக மக்கள் அவரை ஆதரித்து இந்த வெற்றியை கொடுத்துள்ளனர். இதற்கு உறுதுணையாக இருந்து செயல்பட்ட மாவட்ட செயலாளர்கள் பன்னீர்செல்வம், கணேசன், சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ மற்றும் திமுக முன்னோடிகள், மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் வாக்களித்த பொதுமக்கள் அனைவருக்கும் எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன். தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் செயல்பாட்டின் அரவணைப்போடு மக்களுக்கான பணியை தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுப்பேன். தமிழகத்தின் மீது அக்கறை இல்லாத செயல்பாட்டில் பயணித்துக் கொண்டிருக்கும் மக்கள் விரோத ஆட்சியாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் தூக்கி எறியப்பட்டு தலைவர் ஸ்டாலின் முதல்வராக பாடுபடுவேன் என்றார்.

Tags : Stalin ,
× RELATED சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி...