×

மதுராந்தக நல்லூர் திருக்குளம் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார கோரிக்கை

சேத்தியாத்தோப்பு, மே 25: சேத்தியாத்தோப்பு அருகே மதுராந்தக நல்லூர் கிராமம் சிதம்பரம் சாலை அருகில் திருக்குளம் உள்ளது. இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் வழித்தடங்கள், வடிகால் வழி ஆகியவை காலப்போக்கில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி அழிந்து விட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது இக்குளத்திற்கு மோட்டார் பம்புசெட் மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இதில் மீன் வளர்த்து ஒரு வருடத்திற்கு பிறகு குளத்தில் மீன்பிடித்து விற்பனை செய்து வந்தனர்.தற்போது திருக்குளத்தில் அதிகளவில் ஆகாயத்தாமரைகள் மண்டிக்கிடப்பதால் அசுத்தமாகி வருகிறது. எனவே அதிகாரிகள் இக்குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தண்ணீர் வழித்தடத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Maduranthaka Nallur ,Tirukkulam ,
× RELATED திருக்கழுக்குன்றத்தில் குடிநீர்...