×

சென்டர் மீடியனில் அரசு பஸ் மோதி 4 பயணிகள் படுகாயம்

விருத்தாசலம், மே 25:  கடலூர்  மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து சேலம் வரை செல்லும் அரசு பேருந்து நேற்று முன்தினம் காலை சுமார் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி அருகே சென்று கொண்டிருந்த   போது, திடீரென அங்குள்ள சென்டர் மீடியனில் பேருந்து மோதி  விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த  ஈரோடு மாவட்டம்,  சம்மதம்பாளையத்தை சேர்ந்த  கணேசமூர்த்தி மனைவி கவுரி(27), முத்துசாமி(55),  வினோத் குமார்(30) மற்றும் மணிவண்ணன்(65) ஆகிய 4பேரும் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த  விருத்தாசலம்  போலீசார் காயமடைந்த 4பேரையும் மீட்டு  விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக கொண்டு  சென்றனர். உடன் பேருந்தில் இருந்த மற்ற பயணிகளை  இறக்கி  மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சேதமடைந்த  பேருந்தை மீட்டு விருத்தாசலம் காவல் நிலையம் கொண்டு  சென்றனர். இதையடுத்து கவுரி கொடுத்த புகாரின்பேரில்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Tags : passengers ,metro ,
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...