×

விவசாயியை தாக்கியவர் கைது

விருத்தாசலம், மே 25: விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகேயுள்ள குருவன்குப்பத்தை சேர்ந்தவர் முருகன்(44), விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள அங்காளம்மன் கோயில் தெருவில் நடைபெற்ற  திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அங்கு அதே பகுதியை சோந்த ஏழுமலை(37) என்பவர் குடிபோதையில் அசிங்கமாக திட்டிக்கொண்டிருந்தார். இதனை முருகன் தட்டிக்கேட்டார். அதற்கு ஏழுமலை அவரையும் திட்டி, தாக்கியதோடு கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின்பேரில் ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு