கோவில்பட்டி, மே 25: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி கமிஷனர் அச்சையா எச்சரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவின்பேரில் கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் அச்சையா ஆலோசனைப்படி கோவில்பட்டி நகரில் அண்ணா பேரூந்து நிலையம் மற்றும் மெயின்ரோடு பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறதா? என நகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.இதில் 56 கடைகளில் ஆய்வு நடந்தது. 6 கடைகளில் தடை செய்யப்பட்ட, 21 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.