×

விவசாயியை மிரட்டிய தொழிலாளி கைது

கோவில்பட்டி, மே 25: கோவில்பட்டி அருகே விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஆடுமேய்க்கும் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் கீழத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (60).  விவசாயி. இதே ஊரை சேர்ந்தவர் உமயபாண்டி (55), ஆடுமேய்க்கும் தொழிலாளி. இவர்,  லட்சுமணனின் தோட்டத்தில் ஆடுகளை மேய விட்டுள்ளார். இதனை லட்சுமணன்  தட்டி கேட்டுள்ளார். இதனால்  இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த  உமயபாண்டி, லட்சுமணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில்  காயமடைந்த லட்சுமணன், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிந்து ஆடு மேய்க்கும்  தொழிலாளி உமயபாண்டியை கைது செய்தனர்.

Tags :
× RELATED புளியங்குளத்தில் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் வாக்களிப்பு