×

திருப்பத்தூரில் பரபரப்பு முதல்வர், அதிகாரிக்கு புகார் கடிதம் அனுப்பியதால் ஆத்திரம் மின்வாரிய அலுவலகத்தில் சக ஊழியரை தாக்கிய செயற்பொறியாளர்

திருப்பத்தூர், மே 25: முதல்வர் மற்றும் மின்வாரிய சேர்மனுக்கு புகார் கடிதம் அனுப்பியதால் ஆத்திரமடைந்த செயற்பொறியாளர் சக ஊழியரை தாக்கிய சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் பகுதியில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு உதவி செயற்பொறியாளராக கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். உதவி கணக்கு அலுவலராக சிவாஜி உள்ளார். இந்நிலையில் நேற்று காலை செயற்பொறியாளர் கிருஷ்ணன் ‘நான் ஊழல் செய்வதாகவும், பொய் கணக்கு எழுதி வருவதாகவும் என் மீது நீ முதல்வர் மற்றும் மின்வாரிய சேர்மனுக்கு புகார் அனுப்புகிறாய் என்று கூறி சக ஊழியர்கள் மத்தியில் திடீரென சிவாஜியை சரமாரியாக தாக்கினாராம்.

அப்போது அவர் மயங்கி விழுந்ததாக தெரிகிறது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து அலுவலகத்திலிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர், மயங்கிக் கிடந்த சிவாஜியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சிவாஜி திருப்பத்தூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர். மின்வாரிய அலுவலர் அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் உதவி கணக்கு அலுவலரை செயற்பொறியாளர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Chief Minister ,Tirupattur ,Electricity Office ,Officer ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...