×

தர்மபுரியில் விஷம் கலந்த நீரை குடித்த 7 ஆடு பலி

தர்மபுரி, மே 24:  தர்மபுரியில் விஷம் கலந்த நீரை குடித்த 7 ஆடுகள் பலியாகின. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த எர்ரனாஅள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவலிங்கம். இவர், 50 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த மாதப்பன்(50), நீலகிரி தோப்பு கூசுக்கல் என்ற இடத்தில் பாறை குழிகளில் பன்றி, மயில், மான் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாட, குழிகளில் தண்ணீர் ஊற்றி, அதில் விஷம் கலந்து வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த தண்ணீரை குடித்து உயிரிழக்கும் விலங்குகளை வேட்டையாடுவதை தொழிலாக வைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று விலங்குகளை வேட்டையாட நீருடன் விஷ மருந்து கலக்கி, பாறைக்குழியில் ஊற்றி வைத்திருந்தார். அப்போது சிவலிங்கம் வளர்த்து வந்த 15 ஆடுகள், அந்த நீரை குடித்து மயங்கி விழுந்தன. இதுகுறித்த தகவலின் பேரில், பாப்பாரப்பட்டி அரசு கால்நடை மருத்துவர் சரவணன் அங்கு வந்து ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி 7 ஆடுகள் உயிரிழந்தன. இது குறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Tags : Dharmapuri ,
× RELATED மாணவியை பலாத்காரம் செய்த...