×

தர்மபுரியில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தர்மபுரி, மே 24: தர்மபுரியில், திமுக வேட்பாளர் செந்தில்குமார் வெற்றி பெற்றதையொட்டி, திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில், திமுக வேட்பாளர் செந்தில்குமார் 20வது சுற்று முடிவில், 5,20,114 வாக்குகளும், பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 4,22,170 வாக்குகளும் பெற்றனர். அன்புமணியை விட 97 ஆயிரத்து 944 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளதால், திமுக வேட்பாளர் செந்தில்குமார் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இதையடுத்து, தர்மபுரி நான்குரோடு பகுதியில் திரண்ட திமுகவினர், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதேபோல், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், திமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

Tags : Dharmapuri ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...