திருச்சி, மே 24: திருச்சி மக்களவை தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை சாரநாதன் கல்லூரியில் நேற்று நடந்தது. இங்கு மக்களவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற வாக்குகள் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தது. இதில் திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் நேற்று அதிகாலை 1.30 மணி முதல் 4 மணி வரை கண்காணிப்பு கேமராக்கள் இயங்கவில்லை. இதையறிந்த காங்கிரஸ் முகவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யாத நேரத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என புகார் செய்தனர்.