×

உடுமலையில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

உடுமலை,மே24: பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட மகேந்திரன் வெற்றிவாய்ப்பை இழந்தார். நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே சண்முகசுந்தரம் முன்னணியில் இருந்தார். இதையடுத்து, திமுகவினர் உடுமலை நேரு வீதியில் உள்ள திமுக அலுவலகத்தில் குவிந்தனர். பல ஆண்டுகளுக்கு பிறகு பொள்ளாச்சி  தொகுதியில் திமுக வென்றுள்ளதால் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

மத்திய பஸ் நிலையம் முன்பு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதேபோல், மடத்துக்குளம், குமரலிங்கம், ராமச்சந்திராபுரம், தேவனூர்புதூர், எரிசனம்பட்டி,திமுக கிளைக்கழக சார்பாக நிர்வாகிகள் கோவிந்தராஜ் பாரதி பழனிகுமார் செந்தில்குமார் சபரிமுத்துவேல் ராசு ராதாகிருஷ்ணன் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். அதேபோல உடுமலை காந்தி சதுக்கம் 25வது வார்டு திமுக நிர்வாகிகள்,தொண்டர்கள்  பட்டாசு வெடுத்து இனிப்பு வழங்கினர்.

Tags : Celebration ,Udumalai ,
× RELATED மாமல்லபுரத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்