×

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு

நாகை, மே 24: நாகை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க நாகை முழுவதும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.நாகை மக்களவை தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை திருவாரூர் திருவிக கல்லூரியில் நடைபெற்றது. அதேபோல் மயிலாடுதுறை மக்களவை தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் நேற்று நடந்தது. மயிலாடுதுறை நாகை மாவட்டத்தில் உள்ளது. நாகை மக்களவை தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை திருவாரூர் மாவட்டத்தில் நடந்தால் நாகை மக்களவை தொகுதிக்குள் வருகிறது.எனவே வாக்கு எண்ணிக்கையின்போது நாகை மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறலாம். இதை தடுக்க வேண்டும் என்பதற்காக முன்னெச்சரிக்கையாக நாகை எஸ்பி விஜயகுமார் தலைமையில் நாகை புதிய மற்றும் பழைய பஸ்ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேசன், கோர்ட், வண்டிபேட்டை, தம்பிதுரை பூங்கா, அக்கரைபேட்டை செல்லும் சாலை என்று எல்லா இடங்களிலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் தலா 4 ஏட்டுக்கள் வீதம் பாதுகாப்பு பணியில் நேற்று காலை முதல் ஈடுபட்டிருந்தனர்.வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏதும் நாகையில் நடைபெறவில்லை.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...