×

தொடர் குற்ற சம்பவம் 2 பேருக்கு குண்டாஸ்

பல்லாவரம்: குன்றத்தூர், மேத்தா நகர், 13வது தெருவை சேர்ந்த கார்த்திகா (27) என்பவரிடம் செயின் பறித்த குன்றத்தூர், ராஜ ராஜேஸ்வரி நகர், பாலவராயன் குளக்கரை தெருவை சேர்ந்த அண்ணாமலை (25), குன்றத்தூர், திருநாகேஸ்வரம் காலனி, நாவிதர் தெருவை சேர்ந்த சந்திரசேகர் (எ) எலி (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  இவர்கள் மீது பூந்தமல்லி, போரூர், மாங்காடு ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...