சிறுமுகை அருகே பவானி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

மேட்டுப்பாளையம், மே 24: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை அருகே பவானி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர். கோவையை அடுத்த அன்னூர் ருத்திரியம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேஷ்(50). விவசாயி.  இவர் சிறுமுகை அருகே காந்தவயல் பகுதியில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். ேநற்று காலை முருகேஷ், தனது மகள் கவுரி(22), அண்ணன் மகன் பிரதீப்(19) ஆகியோருடன் காந்தவயல் சென்றார். அங்கு விவசாய நிலத்தை பார்வையிட்ட 3 பேரும் மதியம் அருகில் இருந்த பவானி ஆற்றில் குளிக்கச்சென்றனர். அப்போது ஆற்றின் நடுவே குளித்த பிரதீப் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பலியானார்.

அவரை காப்பாற்ற முயன்ற முருகேஷ், கவுரி இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதை கண்ட அக்கம், பக்கத்தினர் மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ( பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் சிறுமுகை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். முருகேஷ், பிரதீப் ஆகியோரின் உடல்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவுரியின் உடலை இரவு 7 மணிவரை தேடினர்.

வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதி என்பதாலும், இருள் கவிழ்ந்த நேரம் என்பதாலும் கவுரியின் உடலை தேடும் பணியை தொடர முடியாமல் நிறுத்தினர். மீண்டும் இன்று காலை தங்களது பணியை தொடர உள்ளதாக  தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: