×

பைக் மீது கார் மோதல்: ஒருவர் பலி

அரவக்குறிச்சி,மே 24: கரூரிலிருந்து பள்ளப்பட்டிக்கு பைக்கில் இரண்டு பேர் சென்றனர். கேர் நகர் பள்ளப்பட்டியை சேர்ந்த பாலு (45)பைக்கை ஓட்டினார். அதே பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் கார்த்திக் (22) பின்னால் அமர்ந்து வந்தார்.அரவக்குறிச்சி அருகே தடா கோவில் பிரிவு ரோட்டில் தேசிய நெடுஞ்சாலை  குறுக்கே சாலையை கடக்கும் போது,  ரயில்வே துறையில் துணைப் பொது மேலாளர் ஆக பணிபுரிந்து வரும்  ஆனந்தன் (42). சேலம் நோக்கி காரில் சென்றார். காரை அதே பகுதியைச் சேர்ந்த   பிரபு(32) ஓட்டி வந்தார்.  இந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பள்ளப்பட்டியை சேர்ந்த பாலு (45). சம்பவ இடத்திலேயே பலியானார். பைக் பின்னால் அமர்ந்து வந்த பிரான்சிஸ் கார்த்திக் (22) பலத்த காயத்துடன் கரூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Car collision ,
× RELATED ஆத்தூர் அருகே கார்கள் நேருக்கு நேர்...