×

தளவாபாளையம் பிரிவுசாலையில் திமுக தொண்டர்கள் ஆரவாரம்

க.பரமத்தி, மே 24:  கரூர் பாராளுமன்ற தொகுதி மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று கரூர் அருகேயுள்ள தளவாபாளையம் தனியார் பொறியியல் கல்லுரியில் நடைபெற்றது.  தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் எம்பி தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அதிமுக வேட்பாளர் தம்பிதுரை உள்பட 43வேட்பாளர்களும், அரவக்குறிச்சி எம்எல்ஏ தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி, அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் உள்பட 63வேட்பாளர்களும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு வேட்பாளருக்கும் எவ்வளவு வாக்கு என கணக்கிட்டு மொத்த வேட்பாளர்களது வாக்கு எண்ணிக்கையும் சேர்த்து முடிவு அறிவிக்கப்பட்டது. வெளியான 4மணியளவில் வாக்கு எண்ணும் மையத்தில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜி வாக்கு எண்ணிக்கையில் முன்னணியில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அவரது ஆதரவாளர்கள் கரூர் சேலம் பைபாசில் தளவாபாளையம் பிரிவு அருகே 100க்கும்மேற்பட்ட தொண்டர்கள் ஒன்று கூடினர். வெற்றி கொண்டாட்டத்தில் திமுகவினர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : DMK ,volunteers ,division ,Jawaharlalakam ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்