×

2 குழந்தைகளுடன் தாய் மாயம்

திண்டிவனம், மே 24: திண்டிவனத்தை அடுத்த தாதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்(40). தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீதா(37). இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி நிரஞ்சனா(6), நிஷால்(4) என குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு இரண்டு குழந்தைகளுடன் சென்ற கீதா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் காணவில்லை. இது குறித்து சண்முகம் கொடுத்த புகாரின்பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : children ,
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்