தீயணைப்பு வீரர்களுக்கு குடியிருப்பு கட்டித்தர வலியுறுத்தல்

சங்கராபுரம், மே 24: சங்கராபுரம் தாலுகா பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் எங்கு தீ விபத்து நடந்தாலும் அங்கு உடனடியாக சங்கராபுரம் தீயணைப்பு படையினர் சென்று தீயை அணைப்பர்.

இந்த தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் வீரர்கள் தங்க குடியிருப்பு வசதி இல்லை. தற்போது கடந்த இரண்டு ஆணடுகளாக தீயணைப்பு நிலையம் அரசு இடத்தில் இயங்கி வருகிறது. தீயணைப்பு நிலையத்துக்கான இடம் போக மேலும் இடவசதி இங்கு அதிக அளவில் உள்ளது. இங்கு பணியாற்றும் தீயணைப்பு வீரர்கள் வெளியூர்களில் இருந்து பணிக்கு வருவதால் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, சங்கராபுரம் தீயணைப்பு நிலையம் உள்ள இடத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு குடியிருப்பு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: