மணல் கடத்திய மினி லாரி பறிமுதல்

காலாப்பட்டு, மே 24: வானூர் அருகே கொடூர் கிராமத்தில் உள்ள ஏரியில் மணல் கடத்தப்படுவதாக கோட்டக்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மினி லாரியில் மணல் ஏற்றி வந்த ஆசாமி, போலீசாரை கண்டவுடன் தப்ப முயன்றார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, கொடூர் பகுதியை சேர்ந்த மோகன் மகன் சசிகுமார் (30) என்பதும், ஏரியில் இருந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளி விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.இதையடுத்து சசிகுமார் மீது போலீசார் வழக்கு பதிந்து மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

Related Stories: