இளம்பெண் மாயம்

திருவெண்ணெய்நல்லூர், மே 24: திருவெண்ணெய்நல்லூர் அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர், ஏனாதிமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து அரசு பொதுதேர்வில் தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று நர்சிங் கல்லூரி சேர்க்கைக்காக சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் பல மணிநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தாய் திருவெண்ணெய்நல்லூர்போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: