×

அகற்றப்பட்ட சிசிடிவி கேமராக்களை மீண்டும் பொருத்த கோரிக்கை

திண்டிவனம், மே 24:  திண்டிவனம்-மயிலம் சாலையில், சாலை விரிவாக்க பணி நடைபெற்று முடிவடைந்துள்ளது. மேம்பாலம் முதல் ஜக்காம்பேட்டை வரையிலான குறுகிய சாலையை தேசிய நெடுஞ்சாலை துறையால் விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம் செய்யப்பட்டு சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இதற்கு முன்னதாக சாலையின் இரு புறங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது. சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றபோது அகற்றப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மீண்டும் பொருத்தப்படுமா என பொதுமக்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. திண்டிவனத்தில் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. மேலும் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, சேதமடைந்த சிசிடிவி கேமராக்களையும் பழுது நீக்க வேண்டும், மயிலம் சாலையில் அகற்றப்பட்ட கேமராக்களையும் மீண்டும் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...