×

மணல் திருட்டை தடுக்க போலீசார் நடவடிக்கை

பண்ருட்டி, மே 24: பண்ருட்டி அருகே கரும்பூர், அக்கடவல்லி, எனதிரிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அரசு அனுமதியின்றி மணல் எடுக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்ட எஸ்பி சரவணன் உத்தரவின் பேரில் ஏற்கனவே கெடிலம் ஆற்றில் 3 இடங்களிலும்,  கண்டரக்கோட்டையில் 3 இடங்களிலும் பள்ளம் தோண்டி மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது பண்ருட்டி அருகே அக்கடவல்லி கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் 2  இடங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் ேதாண்டி மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

Tags : Police action ,
× RELATED திருப்பதி மாவட்டத்தில் போலீசார்...