செய்துங்கநல்லூர், மே24: செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார்குளம் புனித சூசையப்பர் ஆலய திருவிழா சப்பர பவனியுடன் நடந்தது. தூத்துக்குடி மறைமாவட்டத்தின் கடைசி பகுதியும், பாளையங்கோட்டை மறை மாவட்த்தின் கடைசி பகுதியாகவும் விளங்கும் நாட்டார்குளம் 108வது பங்காக உருவாக்கப்பட்டது. இங்குள்ள புனித சூசையப்பர் ஆலய திருவிழா நடைபெற்று வருகிறது. 10 நாள் விமர்சையாக கொண்டாடப்படும் இந்த திருவிழா கடந்த மே மாதம் 14ம் தேதி மாலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பிறகு தொடர்ந்து காலை 7 மணிக்கு திருவிழா ஆடம்பரக்கூட்டுத்திருப்பலி நடந்தது. இதில் நாள்தோறும் இறை பணியாளர்கள் சிறப்பு திருப்பலி நடத்தினர். தைலாபுரம் ராபின், டி.கள்ளிகுளம் ஆங்கிலப்பள்ளி முதல்வர் வின்சென்ட், வைகுண்டம் அதிபர் மரியவளன், சிந்தாமணி குழந்தைராஜன், பாளையஞ்செட்டிகுளம் அந்தோணி ராஜ், வள்ளியூர் உளவியல் ஆலோசகர் ஜஸ்டின், செய்துங்கநல்லூர் ஆராக்கிய லாசர், ஆர்.சி.பள்ளிகள் கண்காணிப்பாளர் பென்சிகர், ஆகியோர் திருப்பலி நடத்தினர்.