அம்பை, மே 24: அம்பை அருகே மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். அம்பை அருகேயுள்ள ஊர்க்காடு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் இசக்கியம்மாள் (78). இவர் காற்றுக்காக வீட்டுக்கு வெளியே திண்ணையில் படுத்திருந்தார். அதிகாலை அங்கு வந்த மர்ம நபர், இசக்கியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து சென்றார். புகாரின் பேரில் அம்பை எஸ்ஐ அருளப்பன் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகிறார்.