×

மின்கம்பத்தில் பைக் மோதி பள்ளி மாணவர் பலி

பாவூர்சத்திரம், மே 24: பாவூர்சத்திரம்- கடையம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த அன்னராஜ் பீட்டர் மகன் மெரின் (16). இவரும், இவரது நண்பரான அரியப்புரம் வடக்குத் தெருவை சேர்ந்த குமரேசன் மகன் சரவணக்குமார் (16)   என்பவரும் 10ம் வகுப்பில் தேர்ச்சிபெற்று பிளஸ் 11 வகுப்புக்கு செல்ல உள்ளனர். கோடை விடுமுறை என்பதால் கட்டுமானப் பணிக்கு சென்று வந்தனர். இதே போல் நேற்று காலை இருவரும் பாவூர்சத்திரம்- கடையம் ரோட்டில் பைக்கில் புறப்பட்டு வேலைக்கு சென்றுகொண்டிருந்தனர். பைக்கை சரவணக்குமார் ஓட்டிச்சென்றார். தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது திடீரென தறிகெட்டு ஓடிய பைக், அங்குள்ள மின்கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மெரின் இறந்தார். சரவணக்குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.  தகவலறிந்து பாவூர்சத்திரம் எஸ்ஐ மாணிக்கராஜ் மற்றும் போலீசார், மெரின் உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : school student ,
× RELATED சத்தியமங்கலம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி