கூடலூர்-எல்லமலை சாலை சீரமைக்க கோரிக்கை

கூடலூர், மே 23: கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட  எல்லமலை, பெரிய சோலை, சீபுரம், கிளன்வன்ஸ், சந்தன மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும்  நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் கடந்த வருடம் பெய்த மழை காரணமாக கிளன்ஸ்வன்ஸ் பகுதியில் சாலை ஓரத்தில் மிகப்பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டு சாலை சேதம் அடைந்து உள்ளது.

சேதமடைந்த பகுதியில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டு தற்போது வாகனங்கள் சென்று வருகின்றன. எனினும் மழைக் காலத்தில் இந்த பகுதி மேலும் சேதம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அவ்வாறு சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டால் பேருந்துகள் இப்பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். மேலும் இப்பகுதிகளுக்கு செல்ல மாற்று சாலைகளும் கிடையாது. அத்துடன் அடுத்த மழைக்காலம் துவங்கும் நிலையில் உள்ளது. எனவே இந்த பகுதியில் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்வதற்கான உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கன்னியார்களி நாட்டியம்

பாலக்காடு மாவட்டத்திலுள்ள சித்தூர் பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பல்லசேனாவை சேர்ந்த கீர்த்தி கலைக்குழுவினரின் கன்னியார்களி பாரம்பரிய நாட்டியம் நேற்று நடந்தது.

Related Stories: