ஈரோடு, மே 23: அந்தியூர் அடுத்துள்ள பாலக்குட்டையில் மது விற்பதாக நேற்று அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தியதில் அங்கு மது விற்ற மைக்கேல்பாளையம் பாலக்குட்டையை சேர்ந்த சக்திவேல் (48) என்பவரை போலீசார் கைது செய்ததோடு மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.