கோயில் திருவிழா நடத்த கோட்டாட்சியர் தலைமையில் 25ல் பேச்சுவார்த்தை

ஈரோடு, மே 23: ஈரோடு அருகே உள்ள எழுநூற்றிமங்கலம், ராசாம்பாளையம் மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடப்பது வழக்கம். ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை புறக்கணித்துவிட்டு திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக புகார் எழுந்தது. இதேபோல், கடந்த 2014ம் ஆண்டும் புகார் எழுந்தது. இதையடுத்து கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதையடுத்து அனைத்து சமுதாய மக்களும் இணைந்து திருவிழாவை நடத்தினர். இந்தாண்டும் அதே பிரச்னை எழுந்துள்ளதால் திருவிழா நடத்துவது தொடர்பாக வரும் 25ம் தேதி ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: